25 January 2014

பெற்றோரைப் பேணுவோம்


அல்லாஹ் தஆலா  அவனது வணக்கத்திற்கு அடுத்த படியாக அடிக்கடி கூறுவது பெற்றோருக்குப் பணிவிடை செய்வதைப் பற்றித்தான்.1

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் இறை வணக்கத்திற்கு அடுத்தபடியாக வலியுறுத்திக் கூறுவது பெற்றோர் நலம் பேணுவதைத் தான்:

அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ ல்லம் அவர்களிடம் வினவினேன்:
நாயகமே! அமல்களில் சிறந்தது எது? என்று.
 "உரிய நேரத்தில் தொழுவது" என்றார்கள். அடுத்து எது" என்று கேட்டேன். "பெற்றோருக்குப் பணிவிடை செய்தல் " 2

ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகம் யாரிடத்தில் நட்புறவு கொள்வது?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தாய்"
"பிறகு யாரிடத்தில்?"
"உன் தந்தை! என்றார்கள். 3

முதல் மூன்று பரிசுகளும் தாய்க்குத்தான்! நான்காவது பரிசுதான் தந்தைக்கு.

காரணம் ஒரு குழந்தையின் மீது தாய்க்குள்ள  பாசம் அளப்பரியது. ஈடு இணை இல்லாதது

ஒருமுறை இரண்டு பெண்கள் ஒரு குழந்தையோடு நபி தாவூது அலைஹிஸ் ஸலாம்  அவர்களிடம் வந்தனர்
வழக்கை எடுத்து வைத்தனர் இருவரில் ஒருத்தியின் குழந்தையை ஓநாய் பிடித்து சென்றுவிட்டது இருக்கின்ற ஒரு குழந்தைக்கு இருவருமே உரிமை கொண்டாடுகின்றனர். தாவூது அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூத்தவளுக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்புக் கூறிவிட்டனர். அவர்கள் திரும்பி வரும்போது சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் என்ன வழக்கு என்று கேட்டனர் அந்தப் பெண்கள் வழக்கைக் கூறினர் இந்தக் குழந்தை யாருக்கு சொந்தம் என்பதற்கு யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே ஒரு கத்தியை எடுத்து இந்த குழந்தையை இரண்டு துண்டாக அறுத்து உங்கள் இருவருக்கும் பங்கிட்டுத் தரப் போகிறேன். என்றார்கள் உடனே இளையவள் பதறினாள். வேண்டாம் என் குழந்தையை அறுக்காதீர்கள். பரவாயில்லை இந்தக் குழந்தை என் அக்காவிடமே இருக்கட்டும் உடனே சுலைமான் நபி தீர்ப்புக் கூறினார்கள்: உறுதியாக இந்தக் குழந்தை இளையவளுடையதுதான். பெற்ற பாசம் துடிக்கிறது. என்றார்கள்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்:புஹாரி, முஸ்லிம்) 4
தாய், தந்தை இருவருமே போற்றுதலுக்குரியவர்கள்.
பனூ சாயிதா குடும்பத்து மனிதர் ஒருவர் நபியிடத்தில் வந்து வினவினார் :
நாயகமே என் தாய் தந்தை இருவருமே இறந்து விட்டனர். அவர்களது மரணத்திற்குப் பின்னரும் அவர்களுக்கு நான் நான் ஏதாவது நன்மை செய்யமுடியுமா? (கவனிக்க: இக்காலத்தில் பெற்றோர் உயிரோடு இருக்கும்போதே அவர்களை  அரவணைப்பதில்லை  பலர்.)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் ஆம்! நான்கு விசயங்களின் மூலம் அது முடியும் என்றார்கள்

  • அவர்களுக்காக தொழுது துஆ செய்வது; பாவமன்னிப்புத் தேடுவது.
  • அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்களின் மரணத்திற்குப் பின் நிறைவேற்றுவது. 
  • அவர்களின் தோழர்களை கண்ணியப் படுத்துவது.
  • அவர்கள் சொந்தங்களைச்  சேர்ந்து வாழ்வது. 5
அதனால்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்  தந்தையின் தோழமைக்கு கூட தக்க மரியாதை தந்தார்கள்.
 அவர்கள் வரலாற்றில் ஒரு அருமையான தகவல்.

மக்காவின் வழியில் ஒரு கிராமவாசியை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் அவருக்கு சலாம் கூறி அவரை தன வாகனத்தில் அமரவைத்து தன தலையில் இருந்த தலைப்பாகையைக் கழற்றி அவரது தலையில் வைத்து அழகு பார்த்தார்கள் 
அவர்களிடம் பிறகு கேட்கப்பட்டது: அவரோ ஒரு கிராமவாசி. ஒரு திர்ஹம் இரு திர்ஹம் கொடுத்தாலே திருப்தி அடைவார். அப்படியுள்ள அவருக்குப் போய் இவ்வளவு மரியாதை தேவைதானா? 
அதற்கு இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: அவருடைய தந்தை என் தந்தையின் உற்ற தோழராக இருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நவில நான் கேட்டிருக்கிறேன்:நன்மையில் சிறந்த நன்மை ஒருவர் தன்  தந்தையின் தோழருடைய குடும்பத்தினரிடம் நட்புறவுடன் சேர்ந்து வாழ்வதுதான். ஆகவே அவருக்கு தக்க மரியாதை தந்தேன்" என்றார்கள். 6

நம் முன்னோர்களான நல்லவர்கள் பெற்றோரை எந்தளவு பேணுதலாகப் போற்றினர் என்பதைப் பார்ப்போமா?
நல்லோர்கள் வாழ்வை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் நலன் பேணுவதில்பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட விதத்தைப் படித்து மெய்சிலிர்த்துப் போகிறோம்.
பின்வரும் நிகழ்வுகளை வாசியுங்கள் சுப்ஹானல்லாஹ் இந்தளவு பேற்றோரைப் பேண முடியுமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பின் விளிம்பைத் தொடுவீர்கள்.
ஹ்மஸ் இப்னு ஹஸன் ரஹ் அவர்கள் வீட்டில் ஒரு தேளைக் கண்டார்கள். அதை அடிக்க முனைந்தார்கள். அது விருட்டென்று ஓடி ஒரு குழிக்குள் மறைந்தது. அவர்கள் விடவில்லை. குழிக்குள் கையை விட்டு அதைப் பிடிக்க முயன்றார்கள். அது வசமாக தீண்டிவிட்டது. 
''ஏன் இந்தளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்? அதுதான் குழிக்குள் போய்விட்டதே..'' என்று வினவப்பட்டபோது, ''ஒரு வேளை அது வெளியே வந்து என் தாயாரைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சினேன். அப்படி எதுவும் நடப்பதற்குள் நாமே அதைக் கொன்றுவிடலாம் என எண்ணினேன்.''என்றார்கள். இதைப் படிக்கும்பொழுது அபூபக்கர் ரலி அவர்களின் நினைவு நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
தவ்ரு குகையில் தாஹா நபியை மடியில் தாங்கி அருமை அபூபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும்பொழுது அரவம் ஒன்று அவர்களின் பாதத்தைப் பதம் பார்க்க, 'தன் உயிர் போனாலும் பரவாயில்லை... களைப்புடன் கண்ணயர்ந்திருக்கும் கண்மணி அவர்களின் துயில் களைந்துவிடக் கூடாது என்று அந்த விஷத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்ட அபூபக்கர் (ரலி) அவர்களின் தியாகத்தைப் போன்ற நிகழ்வு இது.

மாம் ஜைனுல் ஆபிதீன்( ரஹ்) சிறந்த ஒரு 'தாபிஈ'. 
அவர்களிடம் கேட்கபட்டது: ''நீங்கள் தாயைக் கவனிப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளவர்கள். ஆனாலும் ஒருமுறை கூட தாயாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதில்லையே. ஏன்?''
அவர்கள் கூறிய பதில்: என் தாயின் பார்வையில் பட்டு அவர்கள் மனம் விரும்பிய ஏதேனும் ஒரு உணவுப் பகுதியை நான் கவனிக்காமல் அள்ளி உண்டுவிடுவேனோ அதன் காரணமாக அவர்களைப் புண்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேனோ'' என்று அஞ்சுகிறேன்.

முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தாயாரிடம் உரையாடும்பொழுது குரலைத் தாழ்த்தி தனிந்த குரலில் பேசுவார்கள். பார்க்கிறவர்கள் ''என்ன இப்னு சீரீனுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?'' அடங்கி ஒடுங்கி அமைதியாக பேசுகிறாரே'' என்று கேட்பார்களாம்.

ப்னு அவ்னில் முஸ்னீ ரஹ் அவர்களும் அப்படித்தானாம். ஆனால் ஒருமுறை அவர்களை அவரது தாயார் சற்று தூரத்தில் நின்றிருந்ததால் சப்தமிட்டு அழைக்க இவர்களும் சப்தமிட்டு குரல் கொடுத்தார்களாம். நம்மைப் பொருத்தவரை இதுவெல்லாம் நம் வாழ்வில் அன்றாட நிகழ்வு. ஆனால் அவர்களோ அதைப் பெருங்குற்றமாக நினைத்து இரண்டு அடிமைகளை உரிமையிட்டு அதற்கு பரிகாரம் தேடினார்கள்.

ல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்களின் வாழ்வு மிக மிக ஆச்சரியம். அவர்கள் தன் தாயின் தலையைத் தடவி முத்தமிடுவார்கள்; தாய் கீழிருக்கும்போது மாடிக்கு இவர்கள் ஏறியதே இல்லை. தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் உள்ளது அந்த தாயின் தலைக்கு மேல் நம் பாதம் இருப்பதா? அவர்கள் மனம் அதற்கு இடம் தரவே இல்லை.

விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவிற்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அம்மாவிடம் பயணம் சொன்னார். அப்போது அம்மா மகனே அதோ அந்த கத்தியை எடுத்து என்னிடம் தந்துவிட்டுப் போ என்றார். அந்த அவசர நேரத்திலும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் என்பது ஆச்சரியமல்ல. கத்திமுனையை தன் பக்கமாக பிடித்துகொண்டு பிடியை தாயாரிடம் நீட்டினார். கொடுக்கும் அவசரத்தில் கத்தி குத்தினால் அது என் கையாக வேண்டுமானால் இருக்கட்டும் என் தாயின் கையில் ஒரு கீறல் விழுவதைக்கூட சம்மதியேன். ''மகனே நீ மக்களுக்கு உபதேசம் செய்ய தகுதியானவன். போய்விட்டு வெற்றியோடு திரும்பி வா'' என்று அந்த தாய் வாழ்த்தி வழியனுப்பினாள்.
--------------------------------------------

1 وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا>!

 سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم : أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ؟ قَالَ : الصَّلاةُ لِوَقْتِهَا ، قُلْتُ ، ثُمَّ أَيٌّ ؟ قَالَ : بِرُّ الْوَالِدَيْنِ ، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ،

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَحَقُّ مِنِّي بِحُسْنِ الصُّحْبَةِ ؟ قَالَ : أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أَبُوكَ وَرَوَاهُ وُهَيْبُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ شُبْرُمَةَ ، وَقَالَ فِي الْحَدِيثِ : يَا نَبِيَّ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أَبَاكَ

4 عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلّم أنه قال خرجت امرأتان ومعهما صبيان فعدا الذئب على أحدهما فأخذتا يختصمان في الصبي الباقي فاختصما إلى داود عليه الصلاة والسلام فقضى به للكبرى منهما فمرتا على سليمان عليه السلام فقال ما أمركما فقصتا عليه القصة فقال ائتوني بالسكين اشق الغلام بينكما فقالت الصغرى اشتقه قال نعم قالت لا تفعل حظي منه لها فقال هو ابنك فقضى به لها أخرجاه في الصحيحين

5 عَنْ أَبِي أَسِيدٍ السَّاعِدِيِّ ، قَالَ : جَاءَ رَجُلٌ مِنْ بَنِي سَاعِدَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ أَبَوَيَّ قَدْ هَلَكَا ، فَهَلْ بَقِيَ مِنْ بِرِّهِمَا شَيْءٌ أَصِلُهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا ؟ قَالَ : نَعَمْ ، بِأَرْبَعَةِ أَشْيَاءَ : الصَّلاةُ عَلَيْهِمَا ، وَالاسْتِغْفَارُ لَهُمَا ، وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِ مَوْتِهِمَا ، وَإِكْرَامُ صَدِيقِهِمَا ، وَصِلَةُ رَحِمِهِمَا الَّتِي لا رَحِمَ لَكَ إِلاَّ مِنْ قِبَلِهِمَا قَالَ : مَا أَكْثَرَ هَذَا وَأَطْيَبَهُ يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : فَاعْمَلْ بِهِ ، فَإِنَّهُ يَصِلُ إِلَيْهِمَا

6 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، أَنَّ رَجُلا مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ ، وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ ، فَقَالَ ابْنُ دِينَارٍ : فَقُلْنَا لَهُ : أَصْلَحَكَ اللَّهُ ، إِنَّهُمُ الأَعْرَابُ يَرْضَوْنَ بِالْيَسِيرِ ، فَقَالَ عَبْدُ اللَّهِ : إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ، يَقُولُ : إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ،
 وَحُكِيَ أَنَّ الأَعْرَابِيَّ كَانَ صَدِيقًا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ، ثُمَّ قَالَ : قَالَ ابْنُ عُمَرَ : إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ : احْفَظْ وُدَّ أَبِيكَ ، وَلا تَقْطَعْهُ فَيُطْفِئُ اللَّهُ نُورَكَ

No comments:

Post a Comment