13 June 2016

Tarawih 9th day

from Madrasah Imam Ghazzali http://ift.tt/1XuhxQJ
via IFTTT

06 June 2016

First Day Tarawih- முதல் நாள் தராவீஹ் -2016

from Madrasah Imam Ghazzali http://ift.tt/1XuhxQJ
via IFTTT


முதல் நாள் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு,  திரளாக வந்திருந்த மக்களுக்கு சில பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தினமும் காலையில் ஓதி வரும்படி ஆர்வமூட்டிய அருமையான பத்து திக்ருகளின் தொகுப்பை வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு "நோன்பு கால அமல் அட்டவணை" வழங்கப்பட்டது. மாணவர்கள் தினமும் அந்த அட்டவனையை நிரப்பி மாத இறுதியில் கொண்டு வந்து மதரசாவில் ஒப்படைத்தால்  சிறப்பாக அமல் செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று உறுதி கூறப்பட்டது.

05 June 2016

RAMADHAN INVITATION -ரமளான் சிறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பேரன்புமிக்க பெருமக்களே..
நமது மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டும் புனித ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடனும் பயபக்தியுடனும் நடைபெற உள்ளது.
தற்போது நமது மதரஸா விரிவாக்கம் செய்யப் பட்டு, தொழுகையாளிகள் மனம் குளிரும் வண்ணம் மட்டுமல்ல.. மன ஓர்மையுடன் தொழும் வண்ணமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.
ரமளானில் ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்கு இஷாத் தொழுகையுடன் தராவீஹ் சிறப்புத் தொழுகை, அறிய வேண்டிய பல அரிய தகவல்கள், இறுதிப் பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் உருக்கமான துஆக்களுடன் ‘கியாமுல் லைல்’ சிறப்புத் தொழுகை உள்ளிட்ட நெகிழ்ச்சி ஊட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சுற்று வட்டாரப் பெருமக்கள் தங்கள் குடும்பம் சூழ, அனைத்து நிகழ்வுகளிலும்  கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
                                                                        நிர்வாகம், MIG
மேல் விபரங்களுக்கு :
ஹாஜி. ஜெகபர் அலி 0123327538
செய்யத் முஹம்மது அலி 0162436007
முஹம்மது ஜமீல் 0193727867


02 June 2016

Marhaban Ya Ramadhan! ரமலானே வருக!


நமது மதரஸா இமாம் கஸ்ஸாலி யில் 29 மே 2016 இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு ரமலானே வருக எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

உஸ்தாத் மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில்  பாகவி அவர்களின் சிறப்புரையைக் கேட்க மக்கள் திரள் மதரஸா நிரம்பி வழிந்தது.



மதரஸா விரிவாக்கம் செய்யப்பட்டு கார்ப்பெட் போடப்பட்டு ஏசி வசதி செய்யப்பட்ட பிறகு உஸ்தாத் அவர்களின் புனித பாதங்கள் எமது மதரசாவில் பட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.
மதரசாவைப் பார்வையிட்டு உஸதாத் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் ஆற்றிய உரை :






உஸ்தாத் மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் நிகழ்வை நன்றாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில் , பத்துகேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதா, செலாயாங் மதரசா ஜமாலியா போன்ற பகுதியிலிருந்தும் நமது சுற்று வட்டார பகுதியிலிருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறி நிகழ்வு நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.