28 December 2013

வினா விடை -2 (28-12-2013)


சென்ற வாரத்திற்கான கேள்வி: 
கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள் யாவை?
சொர்க்கத்தில் முதன்முதலாக வழங்கப்படும் உணவு என்ன 
அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் என்ன ?
சில குழந்தைகள் தந்தையின்  சாயலிலும் சில குழந்தைகள் தாயின்  சாயலிலும் பிறப்பதற்கு காரணம் யாது?

பதில்கள் :

  1. கருவிலிருந்து வெளிவராத (பிறக்காத ) உயிரினங்கள்:


  • ஆதம் (அலை)
  • ஹவ்வா (அலை)
  • மூஸா (அலை) அவர்களின் பாம்பு.
  • சாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் 
  • இஸ்மாயீல் அலை அவர்களுக்காக அறுக்கப்பட்ட ஆடு.  
2. சொர்க்கத்தில் முதன்முதலாக வழங்கப்படும் உணவு : 
  • மீனுடைய ஈரல் 
3. அழிவு நாளின் பெரிய அடையாளங்களில் முதலாவது நிகழும் அடையாளம் :
  • பிரமாண்டமான நெருப்பு. அது பரவி மனிதர்களை கிழக்கிலிருந்து மேற்கு வரை விரட்டிச் செல்லும் 
4. சில குழந்தைகள் தந்தையின்  சாயலிலும் சில குழந்தைகள் தாயின்  சாயலிலும் பிறப்பதற்கு காரணம் :
கணவன் மனைவி இவருடைய இந்திரியத்தில் யாருடையது முந்திச் சென்று கர்ப்பப்பையில் விழுகிறதோ அவரது முகச் சாயலில் குழந்தை பிறக்கும் 
பதில் எழுதிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாயன் நற்கூலி வழங்குவானாக!
M. பாத்திமா 
நூருல்லாஹ் -நலீபா ஷமீம் 
ரிஸ்வான் அனஸ் 
முஹம்மது ஸமீருதீன் 
முஹம்மது ரஸ்வி 
T.ஆரிஃபீன் 

இந்த வாரக் கேள்வி:


  1. பொறாமை கூடாது.. அப்படிப் பொறாமைப் படுவதாக இருந்தால் இருவரின் மீது பொறாமைப் படலாம் என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறிய அந்த இருவர் யார்?
  2. நரகத்தை மறுமை நாளில் இழுத்துக் கொண்டு வரப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். எத்தனை மலக்குகள் (வானவர்கள்) அதை இழுத்துக் கொண்டு வருவர் என்று நபி ஸல் கூறினார்கள் ?
  3.  நரகத்தில் வேதனை செய்ய எண்ணிலடங்கா வானவர்கள் இருந்தாலும் அவர்களை நிர்வகிக்கும் தலைமை வானவர்கள் எத்தனை பேர் என்று குர்ஆனில் வருகிறது?

பிஸ்மில்லாஹ்-ஒரு ஆழமான ஆய்வு


  • உலகில் உள்ள எல்லாமே குர்ஆனில் இருக்கிறது..குர்ஆனில் உள்ள எல்லாமே பிஸ்மில்லாஹ்வில் இருக்கிறது..பிஸ்மில்லாஹ்வில் உள்ள எல்லாமே அதன் ب வில் இருக்கிறது  அதிலுள்ள எல்லாமே அதன் கீழே உள்ள ஒரு புள்ளிக்குள் அடக்கம்.  என்று கூறப்படுகிறதே இது எப்படி சாத்தியம் ? அதை நிரூபிக்கும் ஒரு உண்மை வரலாறு.
  • சமீபத்தில் மலேசியாவில் சில மண்ணறைகள் தோண்டப்பட்டபோது எட்டு வருடம்-பன்னிரெண்டு வருடத்திற்கு முன்னால் அடக்கப்பட்ட 12 ஜனாஸாக்கள் எந்த சிதிலமும் எந்த மாற்றமும் இல்லாமல் துர்வாடை கூட இன்றி நறுமணத்துடன் காணப்பட்ட அதிசய நிகழ்ச்சி ..
  • இன்னும் பல தகவல்கள்......
  • கேளுங்க..கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!
  • பதிவேற்றமும் செய்யலாம்.


27 December 2013

மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம் 
பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்....

இன்ஷா அல்லாஹ் நம் மதரஸாவில்  இந்த ஆண்டு மாபெரும் மீலாது தொடர் சொற்பொழிவு  நிகழ்ச்சி கீழ்கண்ட அட்டவணைப் பிரகாரம் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. 

அண்ணல் நபி சல்லல்லாஹு  அலைஹி  வசல்லம் அவர்களது  அருமையான உம்மத்துகள் அனைவரும் திரளாக கலந்து அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் ஆசியையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

02-01-2014 முதல் 13-01-2014 வரை ஒவ்வொரு நாளும் மக்ரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃப் ஓதப்பட்டு இஷாவிற்குப் பின் சிறப்புரை நடைபெறும். 

அனைவரும் வருக ! அறிவமுதம் பருக!! 

26 December 2013

முஹம்மது (சல்) வினாடி - வினா 1


1. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயரின் அர்த்தம் என்ன?
புகழுக்குறியவர் என்பதாகும்.

2. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் திருக்குர் ஆனில் எத்தனை முறை வருகிறது?
நான்கு தடவை வருகிறது.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; கடைசியாக செய்த செயல் எது?
மிஸ்வாக் (குச்சியால் பல் துலக்கினார்கள்)

4. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆடையை விரும்பினார்கள்?
நபி (ஸல்) வெண்ணிற ஆடையை அதிகம் விரும்பியுள்ளார்கள் பச்சைநிற ஆடையையும் விரும்பியுள்ளார்கள்.

5. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்பு  எப்படி இருந்தது?
மிக உயர்ந்த பண்புடனும், குர்ஆனுக்கு முன்மாதிரியாகவும்  இருந்தது.


6. முஹம்மது நபி (ஸல்)அவர்களின் பெரிய அற்புதம் எது?
 அல்குர்ஆன் அகும்.


7. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; எந்த பொருளை மறுக்க கூடாது என்றார்கள்?
தலையணை, எண்ணை, நறுமணப் பொருள், பால்

8. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் அவர்களுக்கு இறைவன் வைத்த பெயர் என்ன?
அஹ்மது என்ற பெயராகும்.

9. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறந்த பின் இறைவன் வைத்த பெயர் என்ன?
முஹம்மது  என்ற பெயராகும்.

10. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்த பின் மறுமையில் இறைவன் வைக்கும் பெயர் என்ன?
மஹ்மூது  என்ற பெயராகும்.


11. முஹம்மது நபி (ஸல்) அதிகம் விரும்பிய காய் எது?
சுரைக்காய் ஆகும்.

12. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய எண்ணை எது?
ஜைத்தூண் எண்ணையாகும்.

13. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; விரும்பிய நிறம் எது?
பச்சை நிறம் ஆகும்.

14. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; பயன்படுத்திய சுர்மா என்ன?
இஸ்மித் என்ற சுர்மாவாகும்.

15. முஹம்மது நபி (ஸல்) அவர்கள்; அதிகம் விரும்பிய நறுமணம் எது?
கஸ்தூரி மற்றும் ஊது ஆகும்.

16. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிடித்த மாமிசம் எது?
ஆட்டின் முன்சப்பைக் கறி ஆகும்.

17. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சுத்தம் எப்படிப்பட்டது?
தூய்மையான ஆடை அணிவார்கள் தினசரி மிஸ்வாக் செய்வார்கள், நறுமணம் பூசுவார்கள். சுர்மா இடுவார்கள், தலைமுடி மற்றும் தாடியை சீப்பினால்; வாறுவார்கள்.

18. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கப்ரை கட்டியது யார்?
ஹழரத் ஆபூதல்ஹா  அன்ஸாரி (ரலி) அவர்களாகும்.

19. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாருக்கு ஸலாம் சொல்லி அனுப்பிய நபி யார்?
மிஃராஜ் பயணத்தின் போது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்.

20. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போருக்கு என்ன சொல்லப்படும்?
ஙஸ்வா என சொல்லப்படும்.

21. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொல்லாத போருக்கு என்ன சொல்லப்படும்?
ஸரிய்யா என்று சொல்லப்படும்

22. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு எது?
கி.பி 571 ஆகும்.

23. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
தந்தை பெயர் அப்துல்லாஹ்  (ரலி) அவர்கள்
தாயார் பெயர் ஆமினா உம்மா (ரலி) அவர்கள்

24. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டானார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிபு ஆகும்.

25. முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் யார்?
ஹ்ழரத் ஹலீமத்துஸ்ஸஃதிய்யா (ரலி) அவர்கள்

முஹம்மது (சல்) வினாடி - வினா 2



26. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்த போது தந்தை இறந்தார்கள்.

27. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல); அவர்களுக்கு வயது என்ன?
6 வயது ஆகும்.

28. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; தாயார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.


29. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயது என்ன?
9 வயது ஆகும்.

30. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

31. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் இறைவழிபாட்டிற்காக தங்கியிருந்த குகையின் பெயர் என்ன?
ஹிரா குகை ஆகும்.

32. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த வயதில் நபிப்பட்டம் கிடைத்தது?
40வது வயதில்

33. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கொண்டு வந்த வானவர் யார்?
ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்.

34. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறங்கிய குர்ஆன் வாசகம் எது?
இக்றஃ பிஸ்மிரப்பிக்க என்பதாகும்.

35. முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் நபிப்பட்டம் கிடைத்த பிறகு எத்தனை ஆண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார்கள்?
13 ஆண்டுகள்

36. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற நிகழ்ச்சிக்கு பெயர் என்ன?
ஹிஜ்ரத் ஆகும்.

37. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் சென்ற போது உடன் சென்ற ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள்

38. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு முதன் முதலில் கட்டிய பள்ளிவாசல் எது?
மஸ்ஜிதுன்னபவீ ஆகும்.
39. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் மதீனாவில் தங்கியிருந்தார்கள்?
10 ஆண்டுகள்.

40. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை வயதில் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்?
63ம் வயதில்

41. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் முதலாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்



42. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள்.

43. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது கலீஃபா யார்?
ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள்

44. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சியின் நான்காவது கலீஃபா யார்?
ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள்

45. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிள்ளை செல்வங்கள் எத்தனை?
7 ஆகும்.


46. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி)
2. ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி)
3. ஹழ்ரத் காசிம் (ரலி)

47. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெண் மக்கள் யார்? யார்?
1. ஹழ்ரத் ஸைனப் (ரலி) அன்ஹா
2. ஹழ்ரத் ருகைய்யா (ரலி) அன்ஹா
3. ஹழ்ரத் உம்மு குல்ஸும் (ரலி) அன்ஹா
4. ஹழ்ரத் பாத்திமா (ரலி) அன்ஹா

48. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வம்சம் எது?
குரைஷி வம்சமாகும்.

49. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தலையிலும் தாடியிலும் எத்தனை நரைமுடிகள் இருந்தது?
14 நரைமுடிகள் இருந்தது.

50. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமுடி எவ்வாறு இருந்தது?
நபிகளாரின் தலைமுடி இரு காதுகளின் பாதிவரை இருந்தது.

முஹம்மது (சல்) வினாடி - வினா 3



51. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூங்கும் முன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தூங்கும் போது இஸ்மித் என்ற சூர்மாவை பயன்படுத்துவார்கள் ஏனெனில் அவை பார்வையை கூர்மையாக்கும் இமை முடியை வளரச்செய்யும்.

52. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை எது?
நபி (ஸல்) அவர்களின் விருப்பமான ஆடை, சட்டையாகவே இருந்தது.

53. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் சட்டையின் கை மணிக்கட்டு வரை நீளமாக இருந்தது.

54. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செருப்பு எவ்வாறு இருந்தது?
நபி(ஸல்) அவர்களின் செருப்பு இரண்டு வார்ப்பட்டையுடையதாக இருந்தது.

55. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை தடை செய்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இடது கையால் சாப்பிடுவதையும், ஒரு செருப்பணிந்து நடப்பதையும் தடை செய்தார்கள்.

56. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரம் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபிஸீனியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது.

57. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
நபி (ஸல்) அவர்களின் மோதிரத்தில் 'முஹம்மது' என்ற ஒருவரியும் 'ரஸுல்' என்ற ஒருவரியும் 'அல்லாஹ்' என்ற ஒருவரியும் செதுக்கப்பட்டிருந்தது. 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குச் சென்றால் தனது மோதிரத்தைக் கழற்றிவிடுவார்கள்'.

58. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோதிரத்தை எந்த கரத்தில் அணிந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் வலது கையில் மோதிரம் அணிபவர்களாக இருந்தார்கள்.

59. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாள் எவ்வாறு இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது.

60. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நிறத்;தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கருப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.

61. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு வேட்டி அணிந்திருந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் கெண்டை காலில் பாதி அளவு வரை வேட்டி அணிவார்கள்.

62. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடப்பார்கள்?
நபி (ஸல்) அவர்கள் நடக்கும்போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான இடத்தில் இறங்குவது போல் அடி எடுத்து வைப்பார்கள்.

63. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு அமருவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்தால் இரு கைகளையும் முழங்காலில் கட்டிக் கொண்டவர்களாக அமருவார்கள்.

64. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உணவருந்தமாட்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு உணவருந்தமாட்டார்கள்.

65. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் என்ன செய்வார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் விரல்களை மூன்று முறை சூப்புவார்கள்.

66. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எதை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

67. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்?
நபி(ஸல்) அவர்கள் பேரீத்தம்பழத்துடன் தர்பூசணியையும் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

68. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விரும்பிய குடிபானம்; எது?
இனிப்பும், குளிர்ச்சியும் உடையவை நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமான பானமாக இருந்தது.

69. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை எவ்வாறு அருந்துவார்கள்?
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்துவார்கள்.

70. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அத்தர் விஷயமாக என்ன சொன்னார்கள்?
உங்களில் எவறுக்கேனும் நறுமணம் வழங்கப்பட்டால் அதை மறுக்க வேண்டாம் ஏனெனில் அது சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்றார்கள்.

71. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்கள் எத்தனை?
27 போர்களாகும்.

72. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்? அவர்கள் யார்? யார்?
11 மனைவிமார்கள் ஆகும்
1. அன்னை கதீஜா      (ரலி)
2. அன்னை ஆயிஷா     (ரலி)
3. அன்னை உம்முசலமா  (ரலி)
4. அன்னை சவ்தா  (ரலி)
5. அன்னை ஹஃப்ஸா  (ரலி)
6. அன்னை ஸைனப்பின்த் குஸைமா (ரலி)
7. அன்னை ஜுவைரிய்யா  (ரலி)
8. அன்னை உம்மு ஹபீபா  (ரலி)
9. அன்னை ஸஃபிய்யா  (ரலி)
10. அன்னை மைமூனா  (ரலி)
11. அன்னை ஸைனப்பின்த் ஜஹ்ஷ்  (ரலி)

73. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த ஆண்டு வஃபாத்தானார்கள்?
ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் 12ம் தேதி (கி.பி 632) திங்கட்கிழமை வஃபாத்தானார்கள்.

74. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்?
மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி பள்ளிவாசலினுள் அமைந்துள்ள அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்னா லில்லாஹி..

75. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த கிழமை நல்லடக்கம்  செய்யப்பட்டார்கள்?
புதன் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்

முஹம்மது (சல்) வினாடி - வினா 4



76. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணித்த மனைவி யார்?
ஹழ்ரத் அன்னை ஸைனப் பின்து குஸைமா (ரலி) அன்ஹா

77. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முஹம்மது என பெயர் சூட்டியவர் யார்?
பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆகும்.

78. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலக பயணம் மேற்க்கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தங்களது 52வது வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

79. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகள் யார்? யார்?
1. ஹழ்ரத் காஸிம்  (ரலி)
2. ஹழ்ரத் அப்துல்லாஹ்  (ரலி)
3. ஹழ்ரத் ஸைனப்  (ரலி)
4. ஹழ்ரத் ருகைய்யா  (ரலி)
5. ஹழ்ரத் பாஃத்திமா    (ரலி)
6. ஹழ்ரத் உம்மு குல்ஸும்  (ரலி)

80. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் அடிமையான மாரிய்யதுல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த குழந்தை யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி) அவர்களாகும்

81. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத்திற்காக வெளியேறிய போது அவர்களின் வயது என்ன?
53 ஆகும்

82. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்


83. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஸஹாபாக்களுடன் ஹஜ் செய்தார்கள்?
சுமார் ஒருலட்ச தோழர்களுடன் ஹஜ் செய்தார்கள்

84. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
ஹஜ்ஜத்துல் வதா விடை பெறும் ஹஜ் என்று சொல்லப்படும்.

85. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய ஆண் மக்கள் 3 பேர்களும் எப்போது மரணமானார்கள்?
நபி (ஸல்) அவர்களுடைய 3ஆண் மக்களும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட்டார்கள். இன்னா லில்லாஹி...

86. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேச்சி எவ்வாறு இருந்தது?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
'நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை அவர்களிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும்.

87. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்பார்களா?
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்ப்பவர்களாகவும், அதற்குப் பிரதியுபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்'.
88. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் அவர்களது புனித நெற்றியிலே முத்தமிட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களாகும்.
89. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே  இருந்தது.

90. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு என்ன சொல்லப்படும்?
ஸஹாபாக்கள் என்று சொல்லப்படும்.

91. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மகத்தான மாபெரும் பாக்கியம் எது?
அல்லாஹ்வை நேரடியாக கண்கூடாக கண்ட மிஃராஜ் உடைய பாக்கியம் ஆகும்.

92. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக சொன்ன வார்த்தை எது?
அல்லாஹும்ம ஃபிர்ரஃபீகில் அஃலா உயர்வான நண்பனின் பக்கம் சேரப் போகிறேன் என்ற வார்த்தையாகும்.


93. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
அல் ஹதீஸ் என்று சொல்லப்படும்


94. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்கு என்ன சொல்லப்படும்?
அஹ்லபைத் என சொல்லப்படும்.


95. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த போர்க்களத்தில் பற்கள் உடைந்தது?
உஹது போர்களமாகும்.


96. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அல்லாஹ் கொடுத்த 6 சிறப்பு அம்சம் என்ன?
1. குறைந்த வார்த்;தைகள் மூலம் நிறைந்த கருத்துக்களை கூறும் வாக்குகள்.
2. என்னைக் கானும் எவரும் மரியாதையுடன் அஞ்சும் தன்மை கொடுத்தும் உதவப்பட்டுள்ளேன்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்களை உபயோகித்துக் கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. எங்கு வேண்டுமானாலும் தொழுவதற்கும் சுத்தம் செய்வதற்கும் எனக்கு இந்த பூமி ஆகுமாக்கப்பட்டுள்ளது.
5. படைப்புகள் அனைவருக்கும் பொதுவான முறையில் நான் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்.
6. என்னைக் கொண்டு நபிமார்கள் வருகை முடிக்கப்பட்டுவிட்டது.


97. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் எத்தனை முறை முடி வெட்டி உள்ளார்கள்?
4முறையாகும்.

98. முஹம்மது நபி (ஸல்;) அவர்களுக்கு முடி வெட்டும் நாவிதர் யார்?
கிதாஷ் என்பவர் ஆகும்.

99. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொடி எவ்வளவு உயரம் இருந்தது?
நபி(ஸல் அவர்களின் கொடி 12 அடி உயரம் இருந்தது.

100. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வேர்வை எப்படி இருக்கும்?
நபி (ஸல்) அவர்களின் வேர்வையின் நறுமணத்தைப் போல் வேறு எந்த ஒரு கஸ்தூரியையும் நான் மணந்ததில்லை என அனஸ்(ரலி) சொன்னார்கள்.


முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 5


101. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசளின் பெயர் என்ன?
மஸ்ஜிதுன் நபவீ ஆகும்.

102. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனார் பெயர் என்ன?
ஹழ்ரத் ஸைத் (ரலி) அவர்களாகும்.

103. முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; பேரர்கள் யார் யார்?
1. ஹரழ்ரத் ஹசன் (ரலி)
2. ஹழ்ரத் ஹுஸைன் (ரலி)

104. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொள்ளு பேரர் பெயர் என்ன?
1. ஹழ்ரத் ஸைனுல் ஆபீதீன்

105. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவின் போது 
 திருக்குர்ஆன் எந்த நிலையில் இருந்தது?
தனித்தனி ஏடுகளில் எழுதப்பட்டும், சில நபித் தோழர்களால்  
  மனப்பாடம் செய்யப்பட்டும் இருந்தது.


106. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், நபித் தோழர்கள் காலத்திலும்; எந்த எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்தன?
கூஃபா நகர எழுத்துக்கள்

107.  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டை 
     சுற்றி முற்றுகையிட்டு வாளேந்தி நின்ற எதிரிகளின் பார்வையிலிருந்து
     தப்பிக்க ஓதிய வஸனம் எது?
  சூரா யாஸீனின் (அத்தியாயம் 361 வஜ்அல்னா என்று துவங்கும் (9வது)வசனமாகும்.

108. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் செய்த சூன்யத்தை முறியடிக்க இறங்கிய சூராக்கள் எவை?
சூரத்துல் ஃபலக் மற்றும் சூரத்துன்னாஸ்.

109. முஹம்மது நபி (ஸல்)அவர்களுடைய சிறப்பு பெயர்கள் திருக்குர்ஆனில் எத்தனை கூறப்பட்டுள்ளது?
ஷாஹித், பஷீர், நதீர், தாஈ, ஹாதீ, ஸிராஜீம் முனீர் உட்பட 27 பெயர்களாகும்.

110. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கல்வி ஞானம் பெருக இறைவனே கற்றுக் கொடுக்கும் துஆ எது?
ரப்பி ஸித்னீ இல்மா. இறiவா எனக்கு கல்வி ஞானத்தை அதிகப்படுத்து வாயாக! என்ற துஆவாகும்.

111. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய எந்த துணைவியாரை பரிசுத்தப்படுத்தி நூர் என்ற அத்தியாயத்தில் 10வஸனங்கள் இறங்கியது?
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பரிசுத்தப்படுத்தி 10வஸனங்கள் இறங்கியது.

112. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மாமனார்கள் யார்? யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) 
ஹழ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி)

113. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் 
  யார்? யார்?
   ஹழ்ரத் உஸ்மானிப்னு அஃப்வான் (ரலி) 
   ஹழ்ரத் அலிஇப்னு அபூதாலிப்  (ரலி)
  ஹழ்ரத் அம்ருப்னு ஆஸ்  (ரலி) ஆகியோராகும்.

114. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அரபு எழுத்துக்களில் புள்ளி (நுக்தா)கள் இருந்தனவா?
இல்லை.

115. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை கற்று பிறருக்கு
 கற்ப்பித்துக் கொடுப்பவர் பற்றி எவ்விதம் புகழ்ந்தார்கள்?
  அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

116. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு முன்பே முழு குர்ஆனையும் மனனம் செய்த பெண் ஸஹாபாக்கள் யார்? யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துனைவிமார்களான அன்னை ஆயிஷா (ரலி) அன்னை ஹஃப்ஸா (ரலி) அன்னை உம்மு ஸலமா (ரலி) ஆகியோராகும்.

117. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் மக்காவில் வஹீ இறங்கியது?
12 ஆண்டுகள் 5 மாதம் 13 நாட்கள்

118. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கு திருக்குர்ஆன் வஸனங்கள் மதினாவில்இறங்கி அருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
9 வருடங்கள் 9 மாதங்கள் 9 நாட்கள்

119. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியரை அல்லாஹ்வின்
  கட்டளைப்படி திருமணம் செய்தார்கள்?
அன்னை ஸைனப் (ரலி) அவர்களையாகும்.

120. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடக்கிற பொழுது நிழல் கீழே  விழுமா?
 விழாது மேகம் அவர்களுக்கு நிழல் கொடுக்கும்.

121. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பிறந்தார்கள்?
நபி (ஸல்) அவர்கள் சுன்னத் செய்யப்பட்ட நிலையிலேயும், ஸுஜுதிலே விழுந்த நிலையிலேயும், சுர்மாயிடப்பட்ட நிலையிலேயும் தம் ஆள்காட்டி விரலை வானின் பக்கம் உயர்த்திய நிலையிலேயும் பிறந்தார்கள்.

122. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த குகையிலே 
முதன் முதலாக வஹீ இறங்கியது?
 ஹிரா என்ற குகையாகும்.

123. முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஹழ்ரத் அபூபக்கர்
 ஸித்தீக் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த குகை எது?
  ஸவ்ர் என்னும் குகையாகும்.

124. முஹம்மது நபி (ஸல்) அவர்களை கனவிலே கண்டால் 
  நம்பலாமா?
ஆம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கனவிலே கண்டால்; அது அவர்களே தான் ஏனெனில் அவர்களின் தோற்றத்திலே ஷைத்தான் வர மாட்டான் என நபியே சொல்லியுள்ளார்கள்.

125. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்க்காக 
   செய்ய இருக்கிற மாபெரும் உபகாரம் எது?
  ஷஃபாஅத்  என்னும் பரிந்துரையாகும்.

எல்லா நேரமும் அல்லாஹ்வை நினையுங்கள்



1)எதையும் செய்ய ஆரம்பிக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருநாமத்தால்)

2)எதையும் செய்ய நினைக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)

3)எதுவும் புகழப்படும் போது என்ன ஓத வேண்டும்?
   சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)

4)துன்பத்தில் உழலும் போது என்ன ஓத வேண்டும்?
    யா அல்லாஹ் (அல்லாஹ்வே)


5) எதையும் பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
மாஷா அல்லாஹ் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே)

6) யாருக்கும் நன்றி கூறும் போது என்ன ஓத வேண்டும்?
ஜஸாக்கல்லாஹூ (அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக)

7) தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

8) பிறர் தும்மும் போது என்ன ஓத வேண்டும்?
    யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் அருள் பாலிப்பானாக)

9) தவறை எண்ணி வருந்தும்போது என்ன ஓத வேண்டும்?    
   அஸ்தஃகு பிருல்லாஹ் (அல்லாஹ் பிழை பொறுப்பானாக)

10) உறுதி மொழி எடுக்கும் போது என்ன ஓத வேண்டும்?
  வல்லாஹிபில்லாஹ் (அல்லாஹ் மீது ஆணையாக)

11) தருமம் செய்யும் போது என்ன ஓத வேண்டும்?
   fபீ ஸபீலில்லாஹ் (அல்லாஹ்வின் பாதையில்

12) யார் மீதும் அன்பு பாராட்டும் போது என்ன ஓத வேண்டும்?
  லி ஹூப்பில்லாஹ் (அல்லாஹ்வின் அன்பிற்காக)

13) யாரிடமிருந்தும் விடைபெறும் போது என்ன ஓத    வேண்டும்?
   fபீ அமானில்லாஹ்(அல்லாஹ்வின் அடைக்கலத்தில்)

14) பிரச்சனைகள் எழும் போது என்ன ஓத வேண்டும்?
தவக்கல்து அலல்லாஹ் (அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்)

15) விரும்பியவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
    fபதபாரகல்லாஹ் (அல்லாஹ் உயர்வானவன்)

16) விரும்பாதவை நடக்கும் போது என்ன ஓத வேண்டும்?
     நஊதுபில்லாஹ் (அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம்)

17) திடுக்கிடும் செய்திகேள்வியுறும் போது என்ன ஓத வேண்டும்?
  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன் (அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மேலும் அவனிடமே திரும்பிவருபவர்களாக உள்ளோம்.