புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே -எம்
பெருமானார் இறைத் தூதர் நபி மீதிலே
புகழ் அனைத்தும் இறைவனுக்கே எனச் சொல்லியே
அந்த இறைத் தூதர் புகழ்கீடு இணையில்லையே
கார்மேகம் போட்டது பார் காவணம்-தென்றல்
காற்றெல்லாம் கமழுது பார் சுவனலோகப் பூமணம்
பார்மீது நபி பிறந்த சுப தினம் -என்று
படைப்பெல்லாம் அகமகிழ்ந்து பாடுது பார் சோபனம் !