நம் மதரஸா இமாம் கஸ்ஸாலியில் வழமை போல்
இவ்வாண்டும் புனித லைலத்துல் பராஅத் சிறப்பு மஜ்லிஸ்
மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்..
மஃரிப் தொழுகைக்குப்பிறகு மூன்று யாஸீன்கள்
ஓதி துஆச்செய்யப்பட்டது
இஷாத் தொழுகைக்குப் பிறகு,மௌலானா மௌலவி
முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அல் புஹாரி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
பின்பு தஸ்பீஹ் தொழுகை, மற்றும் மாபெரும் திக்ரு
மஜ்லிஸ் இன்னும் சிறப்பு துஆ மஜ்லிஸும்,நடைபெற்றது.
இறுதியாக நள்ளிரவில்,செலாயாங் கப்ருஸ்தான் சென்று
ஜியாரத்தும் நடைபெற்றது.இப்புனித மஜ்லிஸில் ஏராளமான
முஸ்லிமான ஆண் பெண்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின்
அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.
சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகத்தினரும்,உஸ்தாது களான
மவ்லவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத்
மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.வஸ்ஸலாம்.