31 August 2014
24 August 2014
செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )வில் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி
அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )வில் 23-08-2014 ( 27 ஷவ்வால் 1435 ) சனிக்கிழமை மாலை நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துல்லில்லாஹ்.
இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் மன்பயீ அவர்களின் துஆவோடு ஆரம்பமானது.
மதரஸாவின் உறுப்பினர்கள் அனைவரும்,விஷேசமான உணவு வகைகளை அவரவர் தனித்தனியே,சந்தோசமாக கொண்டு வந்தார்கள்.
அனைவரும் சந்தோசமான முறையில் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்கள்.மஃரிப் தொழுகை மற்றும் இஷாத் தொழுகையில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நிர்வாகிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வஸ்ஸலாம்.
Subscribe to:
Posts (Atom)