பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் உறுப்பினரும்,ஆலோசகருமான,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அவர்கள்,30-03-2014 காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் selayang sungai tua கபரஸ்தானில் நடைபெற்றது.
அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான்.நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்கள்.நான் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளானுக்குள் குர்ஆன் முடிக்கவேண்டும் என்று குர்ஆனை கற்றுக்கொள்வதில் ரெம்ப ஆர்வம் கொண்டவர்களாய் இருந்தார்கள்.முதல் நாள் தஃப்ஸீர் வகுப்பில் ரெம்பவும் சந்தோஷமாக இருந்தார்கள் என்றும், நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் மிகவும் கவலையுடன் கூறினார்கள்.இவர்களின் இளப்பு நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு பேரிளப்பாகும்.இவர்களைப்போன்று பல நல்லுள்ளங்களை நமது selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலிக்கு,அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.ஆமீன் யாரப்பல் ஆளமீன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மதரஸாவின் அனைத்து நிர்வாகிகள்,ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் நமது selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவினர்,மற்றும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!
இன்ஷா அல்லாஹ் வருகின்ற (05-04-2014 ) சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு, நமது selayang இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா தலைமையில்,அல்ஹாஜ் மர்ஹூம் ஸைஃபுல்லாஹ் அண்ணன் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் மற்றும் 70.000 ஸலவாத்துகள் ஓதி துஆச்செய்யப்படும். வஸ்ஸலாம்.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
வெளியீடு ;- selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலி (ரஹ்)