02 June 2016

Marhaban Ya Ramadhan! ரமலானே வருக!


நமது மதரஸா இமாம் கஸ்ஸாலி யில் 29 மே 2016 இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு ரமலானே வருக எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

உஸ்தாத் மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில்  பாகவி அவர்களின் சிறப்புரையைக் கேட்க மக்கள் திரள் மதரஸா நிரம்பி வழிந்தது.



மதரஸா விரிவாக்கம் செய்யப்பட்டு கார்ப்பெட் போடப்பட்டு ஏசி வசதி செய்யப்பட்ட பிறகு உஸ்தாத் அவர்களின் புனித பாதங்கள் எமது மதரசாவில் பட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது.
மதரசாவைப் பார்வையிட்டு உஸதாத் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் ஆற்றிய உரை :






உஸ்தாத் மவ்லவி கனீமத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் நிகழ்வை நன்றாக ஒளிப்பதிவு செய்து பதிவேற்றினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில் , பத்துகேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதா, செலாயாங் மதரசா ஜமாலியா போன்ற பகுதியிலிருந்தும் நமது சுற்று வட்டார பகுதியிலிருந்தும் வந்திருந்த அனைத்து மக்களுக்கும் நன்றி கூறி நிகழ்வு நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment