சென்ற வாரக் கேள்வி:
- பொறாமை கூடாது.. அப்படிப் பொறாமைப் படுவதாக இருந்தால் இருவரின் மீது பொறாமைப் படலாம் என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறிய அந்த இருவர் யார்?
- நரகத்தை மறுமை நாளில் இழுத்துக் கொண்டு வரப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான். எத்தனை மலக்குகள் (வானவர்கள்) அதை இழுத்துக் கொண்டு வருவர் என்று நபி ஸல் கூறினார்கள் ?
- நரகத்தில் வேதனை செய்ய எண்ணிலடங்கா வானவர்கள் இருந்தாலும் அவர்களை நிர்வகிக்கும் தலைமை வானவர்கள் எத்தனை பேர் என்று குர்ஆனில் வருகிறது?
பதில்கள்:
- இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது.
- ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார்.
- இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி :7529 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5464)
- அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அல்குர்ஆன் 74:30)
சரியான விடை எழுதிய பாராட்டுக்குரியவர்:
M. முனவ்வர் பாத்திமா
No comments:
Post a Comment