08 March 2014

புதிரும் பதிலும்-5

  • இந்த பூமியில் மாளிகை வாங்க எத்தனையோ லட்சம் வேண்டும். ஆனால் சுவனத்தில் மாளிகை வாங்க 12 ............ இருந்தால் போதும். நபியவர்கள் குறிப்பிட்ட அந்த 12 என்ன?
  • இரண்டு கடல்கள்; ஒன்று மதுரமான இனிப்பு நீர். மற்றொன்று உப்புநீர். இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது; அனாலும் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை. இரண்டுக்குமிடையே மறைமுகமான தடுப்பு உண்டு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَهُوَالَّذِيْ مَرَجَ الْبَحْرَيْنِ هَذَاعَذْبٌ فُرَاتٌ وَّهَذَامِلْحٌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًامَّحْجُوْرًا
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)
அந்த இரண்டு கடல் சந்திக்கும் இடம்' எங்கு உள்ளது?
பதில்கள்:
சுன்னத் முஅக்கதா 12 ரகஅத்  தினமும் தொழுது வந்தால் சுவனத்தில் மாளிகை கிடைக்கும் 
حديث عائشة رضي الله عنها الذي أخرجه النسائي أن النبي صلى الله عليه وسلم قال: من ثابر على اثنتي عشرة ركعة بنى الله عز وجل له بيتا في الجنة: أربعا قبل الظهر، وركعتين بعد الظهر، وركعتين بعد المغرب، وركعتين بعد العشاء، وركعتين قبل الفجر. 
அருமை நாயகம்(ஸல்)அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் அனுதினமும் 12 ரகஅத்  சுன்னத் தொழுது வருகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். லுஹருக்கு முன் 4 ரகஅத், லுஹருக்குப் பின் 2 ரகஅத், மக்ரிபுக்குப் பின் 2 ரகஅத் இஷாவிற்குப் பின் 2 ரகஅத், பஜ்ருக்கு முன் 2 ரகஅத் ஆகியவை ஆகும்.

இரண்டு கடல்கள் சந்திக்கும் இடம்: மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லுகிறது.

பதில் எழுதிய அறிவு ஜீவிகள்:
ஆதம் ஹமிதா 
HRM 
நஜீப் அலி- முனவ்வர் பாத்திமா 
நூர் பசீலா 
ஆரிபீன் பின் தாஹிர் 

No comments:

Post a Comment