29 March 2014

புதிரும் பதிலும் 8

மறுமையில் கடும் வேதனைக்குரியவர்கள் என்று நபி (ஸல்)அவர்கள் யாரை எல்லாம் குறிப்பிட்டார்களோ அவர்களில் சிலரைக் கூறமுடியுமா?

உருவப்படம் வரைபவர்கள்
அவர்களிடம் அல்லாஹ் கூறுவான் நீங்கள் வரைந்த இந்த உருவத்திற்கு உயிர் கொடுங்கள் என்று. உயிர் கொடுக்க முடியுமா?  முடியாது. அதனால் அவர்களை அல்லாஹ் கடுமையாக வேதனை செய்வான்.


குர்ஆனை  ஓதி மனனம் செய்து அதை மறந்தவர்கள்

நபி (ஸல்) கூறினார்கள்:
என்னுடைய உம்மத்தின் நன்மை தீமை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அதில் ஆகப் பெரிய குற்றமாக எனக்குக் காட்டப்பட்டது என்ன தெரியுமா?
குர்ஆனை  ஓதி மனனம் செய்து அதை மறப்பதுதான்

பதில் எழுதிய அறிவு ஜீவிகள்:
முனவ்வர் பாத்திமா முஹம்மது நஜீப் 
ஆரிபீன் பின் தாஹிர் 

இந்த வாரக் கேள்வி:

1.மறுமையில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் நழுவ முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய அந்த நான்கு கேள்விகள் என்ன?

2.அல்லாஹ் இந்த உம்மத்திற்கு ஐந்து வக்து தொழுகைகளை கடமையாக்கினான். ஆனால் நமக்கு முன்பே ஒவ்வொரு வக்தும் ஒவ்வொரு நபிக்கு வணக்கமாக வழக்கத்தில் இருந்தது. 
எந்தெந்த நபிக்கு எந்தெந்த தொழுகை வணக்கமாக இருந்தது?
 பதில் எழுதி வாருங்களேன் !

No comments:

Post a Comment