09 June 2014

மலேசியத் தலைநகர் செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ) வில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் ) வில் இன்ஷா அல்லாஹ் வரும் 12-06-2014 ( 15 ஷஅபான் 1435 ) வியாழன் மாலை வெள்ளி இரவு மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும்,மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது.

அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை என்ற தலைப்பில் சிறப்புப் பேருரை நிகழ்த்தி,சிறப்பு துஆச்செய்வார்கள்.இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதரஸாவின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.

இது போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள
இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,  
இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின்
அனைத்துப் பகுதிகளிலும்,  இன்ஷா அல்லாஹ் மிகச்  சிறப்பாக
நடை பெற இருக்கிறது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில்
அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு,கப்ரு
ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.

தொடர்புக்கு ;- ஹாஜி செய்யது முஹம்மது அலி 0162436007 ஹாஜி முஹம்மது ஜமீல் 0193727867

வெளியீடு;-செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி ( ரஹ் )

No comments:

Post a Comment