05 November 2014

மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில் புனித ஆஷுரா தின சிறப்பு நிகழ்ச்சி !!!!


மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் 
கஜ்ஜாலியில் ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை 
இரவு 8.00 மணிக்கு,புனித ஆஷுரா தின 
சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆரம்பமாக. selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 
தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,
அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் 
ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.
பெருமானாரைப் பற்றி ஒரு அழகிய பாடலை, அழகான 
முறையில் பாடி,இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியினை 
துவக்கி வைத்தார்கள்.அல்ஹம்து லில்லாஹ்.


அது சமயம்,தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு 
தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி 
ஹஜ்ரத் கிப்லா,அவர்கள் ,ஆஷுரா தினத்தைப் 
பற்றியும்,கண்ணிய மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள் 
பற்றியும், சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி 
இறுதியில் ஹஜ்ரத் அவர்கள் உருக்கமான, சிறப்பு
 துஆ ஓதி முடித்து வைத்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 1
புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 2

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment